சேந்தமங்கலம், மே 30: ரம்ஜான் பண்டிகையையொட்டி புதன்சந்தையில் நேற்று ஆடுகள் விலை உயர்ந்தது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் வாரந்தோறும் ஆட்டுசந்தை கூடுகிறது. ஆடுகளை வாங்க மற்றும் விற்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் வருகின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. ரம்ஜான் பண்டிகையையொட்டி தேவை அதிகரித்ததால், நேற்றைய சந்தையில் ஆடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ₹5,300க்கு விற்பனையான 10 கிலோ எடைகொண்ட இறைச்சி ஆடு நேற்று ₹5,400க்கும், ₹4,500க்கு விற்பனையான வளர்ப்பு ஆடு ₹4,600க்கும், பிறந்து ஒரு மாதமே ஆன பெண்குட்டி ஆடு ₹1000க்கும், கிடாகுட்டி ₹1200க்கும் விற்பனையானது.