×

பரமத்திவேலூர் அருகே இடி தாக்கி பசுமாடு பலி

பரமத்திவேலூர், மே 30: பரமத்திவேலூர் அடுத்துள்ள எஸ்.வாழவந்தி காளிபாளையம் பொறையன் தோட்டத்தை சேர்ந்த காளியண்ணன் மகன் ராமலிங்கம்(37). இவர் தனது வீட்டில் கறவை மாடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது ராமலிங்கம் தனது வீட்டின் கட்டாந்தரையில் கட்டி வைத்திருந்த பசு மாட்டின் மீது இடி தாக்கியது. இதில் சுருண்டு விழுந்த பசுமாடு உயிரிழந்தது.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விஏஓ மாலதி மற்றும் கே.புதுப்பாளையம் கால்நடை உதவி அலுவலர் கோமதி ஆகியோர் பசு மாட்டை பார்வையிட்டு, பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், அரசின் நிதிஉதவி கிடைக்க ஆவண செய்வதாக கூறினர்.

Tags : Paramadivelur ,
× RELATED பரமத்திவேலூர் அருகே பள்ளியில் கொள்ளையடித்த வாலிபர்கள் இருவர் கைது