×

நாமக்கல்லில் நாளை தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல், மே 30: நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை (31ம் தேதி) தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சூபர்வைசர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், மேலாளர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசோசியேட் போன்ற பணிகளுக்கு பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்பழகுநர் படிப்பு மற்றும் கணினி படிப்பு முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித்தகுதிக்கும் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள், நாளை காலை 10.30 மணிக்கு மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இது தவிர, இதர கல்வித்தகுதி உடையோருக்கும், தகுந்த பணியிடங்களுக்கு பரிசிலீக்கப்படுவார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.




Tags : Namakkal ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...