×

திருச்செங்கோட்டில் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

திருச்செங்கோடு, மே 30:  திருச்செங்கோடு பங்களா தெருவில் பூக்கட்டும் வேலை செய்து வருபவர் முத்து(29). இவர் நேற்று பூ கட்டிய கூலி ₹1300 ஐ கடைக்காரர்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு, புதிய பஸ் நிலையம் சர்க்கஸ் மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவரை வழிமறித்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ₹1300ஐ பறித்துக்கொண்டு ஓடி விட்டனர். இதுகுறித்து முத்து, திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார்,  பணம் பறித்த  எலச்சிபாளையம் அக்கரைப்பட்டியை சேர்ந்த  லாரி டிரைவர் காளியப்பன்(22), ஆயித்தாகுட்டையை சேர்ந்த 19 வயது வாலிபரை கைது செய்தனர். அவர்களை திருச்செங்கோடு நீதிமன்றத்தி–்ல் ஆஜர்படுத்தி,  நீதிபதி தனம் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.


Tags : persons ,throwing knives ,
× RELATED ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது