×

ராசிபுரத்தில் ஜமாபந்தி

ராசிபுரம், மே 30: ராசிபுரம் தாலுகா  அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. நாமக்கல் மாவட்ட  சமூக  பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் துரை தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, கிராம வருவாய்  கணக்குகளை சரிபார்த்தார். இதில் மங்களபுரம், மத்துருட்டு,  ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாயக்கன்பட்டி, ஆயில்பட்டி, முள்ளுக்குறிச்சி,  நாரைகிணறு, ஊனந்தாங்கல், பெரப்பஞ்சோலை உள்ளிட்ட கிராமங்களின் வருவாய்  கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. நிகழ்ச்சியில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை,  ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி, பசுமை வீடுகள் கேட்டு பொதுமக்கள் 114 பேர் மனுக்களை வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட தனித்துணை கலெக்டர் துரை,  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.  வரும் 6ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது.

Tags : Rasipuram ,
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்