×

திமுக கூட்டணி வெற்றிபெற்றதையொட்டி திருத்தங்கல்லில் அன்னதானம்

சிவகாசி மே 30: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து திருத்தங்கல்லில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார், விருதுநகர் தொகுதியில் மாணிக்க தாகூர் மற்றும்  திமுக கூட்டனியில் 38 தொகுதிகளுக்கு அமோக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் சிவகாசி தொகுதி சார்பாக திருத்தங்கல்லில் அன்னதானம் நடைபெற்றது. திருத்தங்கல் நகரச் செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். சிவகாசி தொகுதி செயலாளர் மனிதநேயன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வல்லரசு, செல்வக்குமார், தங்கமுத்து, ஈஸ்வரன், கதிரவன், தன்னாசி, சிவகாசி அசோக், அசோக், சிவகாசி நகரம் பாண்டியராஜன், தீபன், கழுகுமலை, பால்பாண்டி மற்றும் ஏராலமானோர் கலந்து கொண்டனர்.

Tags : alliance ,DMK ,
× RELATED தேர்தல் பணிகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்