×

வாலிபர் மாயம்

சாத்தூரை அடுத்த கே.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் கணேசமூர்த்தி (31). இவர் கடந்த 10ம் தேதி, பிறந்த ஊரில் இருக்கும் தனது தாயாரை பார்க்கச் சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கே.மேட்டுப்பட்டிக்கு வந்த கணேசமூர்த்தி தாயார், ஊருக்கு மகன் வரவில்லை என தெரிவித்தார். உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இது தொடர்பாக வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில், இருக்கன்குடி போலீசார் மாயமான கணேசமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Tags : magician ,
× RELATED சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பிரபல...