×

மே தின விழா

நீடாமங்கலம், மே 30: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அமைப்புசாரா 1வது கிளை தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் 14வது மே தின விழாஅதன் மாவட்ட மேற்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் தலைவர் பொன்கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.1வது கிளை செயலாளர் ராஜேந்திரன், துணைதலைவர் விஜய், தொண்டரணி தலைவர் சாகுல்கமீது மகளிரணி தலைவி விக்டோரியா ராணி முன்னிலை வகித்தனர். கிளைதலைவர் ஆசைதம்பி வரவேற்றார். நீடாமங்கலம் அரசு மருத்துவர் தனபால், மேற்கு மாவட்ட தலைவர் சேகர், மேற்கு மாவட்ட  செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கட்டுமான, அமைப்புசாரா உறுப்பினர்களின் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அண்ணாதுரை நன்றி கூறினார்.


Tags : Festival ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...