சிவகாசி அருகே, திருத்தங்கல் கங்கன்தேவன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (37). கொத்தனார். இவர், திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியில் ஒரு வீட்டில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாரம் கட்டும்போது தவறி விழுந்ததில் காயம் அடைந்தார். திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.