×

காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு முன் குடிமராமத்து பணியை துவங்க வேண்டும்

முத்துப்பேட்டை, மே 30: வருகிற ஜூன் 12ம் தேதி காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக குடி மராமத்து பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என்று என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை எடையூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒன்றிய சிறப்புக்கூட்டம் ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராம்குமார் வரவேற்றார். இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்  கலந்துக்கொண்டு பேசினார்.

கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறப்பதற்கு முன்பு உடன் குடிமராமத்து பணிகளை துவங்க வேண்டும், விவசாயிகளுக்கு கோடை உழவு பணிக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களுக்கு டீசல் மான்யம் வழங்கவேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் சமூக ஆர்வலர் முகமது மாலிக், மாநில தலைவர் புண்ணியமூர்த்தி, கவுரவ தலைவர் நீலன் அசோகன், அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், மாநில துணை செயலாளர் செந்தில்குமார், நாகை மாவட்ட செயலாளர் ராமதாஸ், தஞ்சை மாவட்ட செயலாளர் மணி, திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார், தலைவர் சுப்பையன், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தெய்வமணி, தலைவர் ராஜகோபால், செய்தி தொடர்பாளர் மணிமாறன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kaveri ,
× RELATED தாய்ப்பாலூட்டும் இளம்பெண்ணுக்கு...