திருவையாறு, மே 30: மாணவியை கடத்தி டார்ச்சர் கொடுத்த விளாங்குடி வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்யப்பட்டனர்.திருவையாறு அருகே உள்ள விளாங்குடியை சேர்ந்த மதியழகன் மகன் ஆனந்தராஜ் (25). விவசாய தொழிலாளியான இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை காதலிப்பதாக நடித்து பாலியல் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக திருவையாறு போலீசில் மாணவியின் தாய் புகார் செய்தார். புகாரின்பேரில் ஆனந்தராஜை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.