×

தஞ்சை அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்



தஞ்சை, மே 30: தஞ்சை அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை பள்ளியக்ரகாரம் பழைய கும்பகோணம் சாலையை சேர்ந்தவர் அந்தோணிசாமி (76). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு தஞ்சை அருகே மணக்கரம்பை ஊராட்சி கரம்பையில் உள்ளது. இத்தோப்பில் இருந்த 2 சந்தன மரங்களை மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு வெட்டி கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் அந்தோணிசாமி புகார் செய்தார். திருவையாறு டிஎஸ்பி பெரியண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரம் ரூ.1 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்மநபர்களை நடுக்காவேரி சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் தேடிவருகின்றனர்.

Tags : Tanjore ,
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...