×

மாதர் சங்கத்தினர் திரண்டனர் அறந்தாங்கி அருகே தனியார் பஸ் மோதி தந்தை, மகன் பலி தோட்டத்திற்கு சென்றபோது நிகழ்ந்த சோகம்

புதுக்கோட்டை, மே 30: அறந்தாங்கி அருகே தனியார் பல் மோதி தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கீழையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(55).  விவசாயி. இவரது மகன் விக்னேஷ்வரன்(22). இவர்களுக்கு பட்டரைசேரி பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு தந்தையும், மகனும் தங்களின் பட்டரைசேரி தோட்டத்திற்கு டூவீலரில் சென்றனர். எரிச்சி அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது, எதிரே புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கதவல் அறிந்து வந்த அறந்தாங்கி போலீசார் இறந்த ராஜேந்திரன், விக்னேஷ்வரன் ஆகியோர்களின் உடலை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.


Tags : associates ,Mather ,Aranthangi ,garden tragedy ,
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது