×

உறவினர் கைது காரைக்கால் சேத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால், மே 30:  காரைக்கால் சேத்தூர் கிராமத்தில், சைல்டு லைன் அமைப்பு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.காரைக்கால் மாவட்ட சைல்டு லைன் அமைப்பு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருநள்ளாறு கொம்யூன், சேத்தூர் கிராமத்தில் நடத்தப்பட்டது. திருநள்ளாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணம், அதனை தடுக்கும் முறை, பாதுகாப்பு முறைகள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.காரைக்கால் சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா கலந்துகொண்டு, குழந்தைகள் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய முறைகள் குறித்தும், குழந்தைகள் ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டியது குறித்தும் விளக்கினார்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது முதல், வீடு வந்து சேரும் வரை பெற்றோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்களையும் அவர் விளக்கிக் கூறினார். இதுபோன்ற சூழல் ஏற்படும்போது, 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசியைத் தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார். சினேகா தொண்டு நிறுவனத் தலைவர் தனலட்சுமி குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்துப் பேசினார். நிகழ்ச்சியில் குழந்தைகள் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர், குழந்தைகள் கலந்துகொண்டனர்.

Tags : relative ,
× RELATED வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து...