×

நகராட்சி ஊழியர்கள் மழுப்பல்

வேதாரண்யம், மே 30: வேதாரண்யம் அடுத்த வேட்டைக்கானிருப்பு, புதுக்கடைத்தெரு, தாழந்திருவாசல்  மேற்கு ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்பாடு ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் அருதேத தாழந்திருவாசல் மேற்கு பகுதியில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சிறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் நிலத்தடி நீர் மூலமும் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது.  இருப்பினும் இப்பகுதிக்கு வழங்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. மேலும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் சரிவர தண்ணீர் கிடைப்பதில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள கோவில்பத்து கிராமத்திற்கு கடும் வெயிலில் சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே இப்பகுதிக்கு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு தட்டுபாடு இல்லாமல் தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...