×

ரம்ஜான் முடியும் வரை சாலை பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

ராமநாதபுரம், மே 30:  ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரோட்டில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. ராமநாதபுரத்திலிருந்து நகருக்குள் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் மதுரை வழியாக பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இவ்வழியாக செல்கின்றன. அரசு மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகள் இச்சாலையில் உள்ளன. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து திரளான இஸ்லாமியர்கள் இவ்வழியாக செல்வார்கள்.

ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்ற நிலையில் குறுகிய சாலையாக உள்ள இப்பகுதியில் விரிவாக்க பணிகள் நடைபெறும் போது கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முயன்று விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி வரும் 5ம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு பின் சாலை விரிவாக்க பணிகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Ramjan ,
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு...