×

மதுரையில் துணிகர சம்பவம் டாக்டரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர்

மதுரை, மே 30: மதுரையில் டாக்டரிடம் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கன்னிகாட்டு வலசை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (29). இவர் பார்த்திபனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதுரை ஒத்தக்கடையில் உள்ள தனது நண்பர் நூர் என்பவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒத்தக்கடையில் இருவரும் ஒரு கடையில் சாப்பிட்டு விட்டு டூவீலரில் 4 வழிச்சாலை பாண்டிகோயில் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கழிவு நீர் ஏற்றிச்செல்லும் லாரி ஒன்று இவர்களின் டூவீலரை வழி மறித்து நிறுத்தி உள்ளது. அப்போது லாரியில் இருந்து கீழே இறங்கி வந்த 3 பேர் டாக்டர் சக்திவேலை கற்களை கொண்டு தாக்கி விட்டு, அவர்களிடமிருந்த 2 செல்போன், ரூ.300ஐ பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து டாக்டர் சக்திவேல், ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட முனீஸ்வரன், ஆறுமுகம், வீரபாண்டி ஆகியேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,venture accident ,Madurai ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...