×

முன்விரோதம் காரணமாக பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

திருப்பூர், மே 30:திருப்பூர், இடுவம்பாளையத்தை சேர்ந்த காளீஸ்வரன் (40). இவர் தனியார் மினி பஸ்  டிரைவர். இதே நிறுவனத்தில் பணியாற்றும் வீரபாண்டியன் (31). என்பவரும் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் காளீஸ்வரனுக்கும், வீரபாண்டியனுக்கும் தொழிலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காளீஸ்வரன் வீட்டிற்கு சென்ற வீரபாண்டியனுக்கு தெரிந்த பெண்ணிடம் வீரபாண்டியனை பற்றி காளீஸ்வரன் தவறாக பேசிவருவதாக கூறி அருகில் இருந்த மரக்கடையால் தலைப்பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் மயங்கிவிழுந்த காளீஸ்வரனை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து காளீஸ்வரன் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வீரபாண்டியனை போலீசார் கைது செய்தனர்.

Tags : Bus driver ,arrest ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...