×

சைக்கிள் பிரசார விழிப்புணர்வு பேரணி

உளுந்தூர்பேட்டை, மே 30: உளுந்தூர்பேட்டையில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அரசு பள்ளிகளை முன்னாள் மாணவர்களிடம் தத்து கொடுப்பதை வன்மையாக கண்டிப்பது, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளி மேலாண்மை குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணி உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சியை நோக்கி சென்றது. கன்னியாகுமரி வரையில் சுமார் 1500 கிலோ மீட்டர்  கொண்ட இந்த சைக்கிள் பிரசார பேரணி 5வது நாளாக 782 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சென்றது. ஊர்வலமாக சென்ற மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் ஜெயசங்கர், ஆறுமுகம், தங்கராசு, மோகன், பழனி, ஜெயக்குமார், ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் ரோடு சந்திப்பில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags : Bicycle propaganda awareness rally ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை