×

இளம்பெண் தற்கொலை

திருக்கனூர், மே 30:  திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு செல்வமுருகன் நகரை சேர்ந்தவர் முருகன் மகள் நித்யஸ்ரீ (18). இவர் கூடப்பாக்கம் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். சம்பவத்தன்று, தான் மேல்படிப்பு படிக்க வேண்டும் என தனது தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே மனமுடைந்த நித்யஸ்ரீ வீட்டு சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை