×

இளம்பெண் தற்கொலை

திருக்கனூர், மே 30:  திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு செல்வமுருகன் நகரை சேர்ந்தவர் முருகன் மகள் நித்ய (18). இவர் கூடப்பாக்கம் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். சம்பவத்தன்று, தான் மேல்படிப்பு படிக்க வேண்டும் என தனது தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவே மனமுடைந்த நித்ய வீட்டு சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...