×

வில்லியனூர் கோயிலில் மழை வேண்டி வர்ணலிங்க பூஜை

வில்லியனூர், மே 30:   வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் மழை வேண்டி 42 ஆண்டுகளுக்குப்பிறகு வர்ணலிங்க பூஜை நடந்தது. புதுவை வில்லியனூரில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள வர்ணலிங்கத்துக்கு முழுவதும் தண்ணீர் நிரப்பி பூஜை செய்தால் மழை வரும் என்பது ஐதீகம். மழை இல்லாமல் வெப்பம் அதிகரித்து வருவதால் மழை வேண்டி வர்ணலிங்க பூஜை செய்ய கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள், சிவாச்சாரியார்கள் முடிவு செய்தனர்.அதன்படி, அக்னி நட்சத்திரம் முடிவடையும் நாளான நேற்று, வர்ணலிங்கத்துக்கு பூஜை செய்து பக்தர்கள் தண்ணீர் நிரப்பினர். 42 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இப்பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் திருவரசன் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

Tags : Rainingham Pooja ,Villianur ,
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை