×

ஓட்டப்பிடாரம் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

புதுக்கோட்டை, மே 30: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு தூத்துக்குடி வந்த ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.சண்முகையாவிற்கு வாகைக்குளம் விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் என்னை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று நன்றி தெரிவித்துவிட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார். அவரது ஆலோசனைபடி நானும் தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கனிமொழி எம்.பி.  ஆகியோர் இணைந்து குடிநீர் பிரச்சனைகள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தருவேன் என்றார். அதன்பிறகு அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

இதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோரம்பள்ளம் அருண்குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் புதூர் சுப்பிரமணியன், துணை அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் வெயில்ராஜ், தூத்துக்குடி சுற்றுவட்டார லாரி உரிமையாளர் சங்க தலைவர் தனசிங், ஒன்றிய பிரதிநிதி ஆட்டோ கோபால், குமாரகிரி ஊராட்சி அவைத்தலைவர் பாலசுந்தரம், ஊராட்சி செயலாளர்கள் குமாரகிரி பொன்செல்வன், முடிவை வெங்கடாசல மாரியப்பன், கூட்டுடன்காடு சுவாமிநாதன், கட்டாலங்குளம் சன்னியாசி, திம்மராஜபுரம் மந்திரம் உள்ளிட்ட திமுக பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Tags : Ottapidaram block ,
× RELATED ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல்...