×

பணம் திருடியவர்கள் கைது டிராக்டர் கலப்பையில் சிக்கி பள்ளி மாணவன் பலி

தொண்டாமுத்தூர்,மே30: கோவை அருகே டிராக்டர் கலப்பையில் சிக்கி 7ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். கோவை சிறுவாணி சாலை மாதம்பட்டி இந்திராநகர் பகுதியில் குடியிருப்பவர் பொன்னுசாமி(43).விவசாயி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். தீத்திப்பாளையத்தில் உள்ள சண்முகசுந்தரம் என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பொன்னுசாமி விவசாயம் செய்து வந்தார். தற்போது கோடை மழை பெய்து வருவதால் குத்தகை நிலத்தில் தக்காளி பயிரிடுவதற்காக கரடிமடை அண்ணாநகர் பகுதியில் உள்ள மோகன்ராஜ் என்பவரிடம் வாடகைக்கு டிராக்டர் வாங்கி வந்து நேற்று வயலில் உழவு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது பொன்னுசாமியின் இளையமகனும் 7ம் வகுப்பு மாணவனுமாகிய விக்னேஷ்(13).டிராக்டரின் பின்பகுதியில் அமர்ந்திருந்தார். ராஜா என்பவர் டிராக்டரை ஒட்டி வந்தார். மதியம் 1 மணி அளவில் டிராக்டரின் பின்னால் அமர்ந்திருந்த விக்னேஷ் நிலைதடுமாறி டிராக்டரின் கலப்பையில் தவறி விழுந்தார். இதில் கலப்பையில் சிக்கிய விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொன்னுசாமி அளித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி திறக்க 4 நாட்கள் உள்ள நிலையில் உழவு பணியின் போது டிராக்டரின் கலப்பையில் சிக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : school student ,tractor mishap ,arrest ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...