×

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

ஆலங்குளம் மே 30: சீதபற்பநல்லூர் அருகேயுள்ள உகந்தான்பட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி. கால்நடை விவசாயியான இவர், வளர்த்துவரும் மாடுகளுக்காக வீட்டருகே தொழுவம் அமைத்துள்ளார். தொழுவத்தின் அருகே ஊர் பொதுக்கிணறு பயனற்ற நிலையில் உள்ளது. நேற்று மாலை மாடசாமியின் மகன் தனுஷ்குமார்(4), தந்தையை தேடி தொழுவத்திற்கு வந்தபோது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தான். வெகு நேரமாகியும் மகனை காணாததால் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிணற்றில் பார்த்த போது அங்கு சிறுவன் இறந்த நிலையில் பிணமாக மிதந்துள்ளான். தகவலறிந்து வந்த சீதபற்பநல்லூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பாளை அரசு  மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது மகன் இறப்பு குறித்து எவ்வித முறையிடும் செய்யப்போவதில்லை என கூறிய பெற்றோர், உடலை கேட்டுள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்த பிறகு சிறுவனின் உடலை  பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags : well ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை