மொடக்குறிச்சி, மே 30: மொடக்குறிச்சி அருகே வேனில் 650 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரச்சலூர் மேற்கு தலவுமலை பகுதியில் அரச்சலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை உதவி ஆய்வாளர் முகமது ஷரிப் அமீது ஆகியோர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது 18 மூட்டைகளில் 650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. வேன் டிரைவர் இளங்கோ (23) என்பவரை கைது செய்து, அரிசி மற்றும் வேனையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, அரிசி எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில், யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.