×

இளம்பெண் தற்கொலை

சத்தியமங்கலம், மே 30:  புஞ்சைபுளியம்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (30).  இவருக்கும், கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த ஐஸ்வர்யா (25) என்பவருக்கும்  கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு 4 வயதில் பெண்  குழந்தை உள்ளது.
கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்  மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று  முன்தினம், இரவு ஐஸ்வர்யா வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து  கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கருப்புசாமி நேற்று புஞ்சைபுளியம்பட்டி  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்து போலீசார்  விசாரணை நடத்தினர்.

பின்னர், பெண்ணின் உடலை பிரேதப்பரிசோதனை செய்ய  சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் சென்றபோது உறவினர்கள்  ஐஸ்வர்யா சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 5  ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்டிஓ அசோகன் விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை