×

பிரபல பாடகருக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து போதையில் ரகளை: உதவி இயக்குநர்கள் உள்பட 5 பேர் கைது

சென்னை: பிரபல பாடகர் சீர்காழி சிவசிதம்பரத்திற்கு சொந்தமான காலி இடத்தில் குடிபோதையில் காவலாளியிடம் தகராறில் ஈடுபட்ட சினிமா உதவி இயக்குநர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகர் முதன்மை சாலையில் பிரபல பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 10 கிரவுண்டு நிலம் உள்ளது. இந்த இடத்தை சுற்றி சுவர் அமைத்து, காவலாளி ராஜா என்பவரை பணியில் நியமித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 5 வாலிபர்கள் பாடகருக்கு சொந்தமான கேட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். இதை பார்த்த காவலாளி ராஜா அந்த 5 பேரையும் தட்டிக்கேட்டுள்ளார். ஆனாலும் அவர்கள் காவலாளியை மிரட்டி விட்டு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

இதுகுறித்து காவலாளி ராஜா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அத்து மீறி கேட்டை உடைத்து உள்ளே புகுந்த 5 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சினிமாவில் உதவி இயக்குநர்களாக உள்ள ராஜ்கமார், முருக பொருமாள், பெயிண்டர் சவுந்தர், கோயம்பேட்டில் கூலி வேலை செய்யும் சிவா, வீரய்யா என தெரிய வந்தது. எனவே உதவி இயக்குநகர்கள் உட்பட  5 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : persons ,singer ,assistant directors ,house ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...