×

பொதுப்பணித்துறையின் எச்சரிக்கை மீறி பூண்டி ஏரிக்கரை ஆக்கிரமித்து விவசாயம்

திருவள்ளூர், மே 30: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில், பூண்டி எரிக்கரையையொட்டி உள்ள இடங்களை, பொதுப்பணித்துறையின் எச்சரிக்கையையும் மீறி, ஆக்கிரமிப்பாளர்கள் உழுது நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், புல்லரம்பாக்கம் பகுதியில், சாலையோரம் பூண்டி எரிக்கரை உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்தனர். இதையடுத்து, அங்கு, ‘’பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம். அத்துமீறி யாரும் நுழையக்கூடாது’’’’ என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த உத்தரவையும் மீறி மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் நெல் விவசாயம் செய்ய உழும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, தமிழக அரசு சட்டம் இயற்றியும், இதை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, துவக்கத்திலேயே ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Pondi ,
× RELATED ஆந்திரா - கண்டலேறு அணையில் இருந்து...