×

ஆசிய பசிபிக் யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

கும்மிடிப்பூண்டி, மே 30: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 19ம் தேதி ஆசிய பசிபிக் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, தாய்லாந்து, வங்கதேசம், மலேசியா, ஜப்பான், இலங்கை, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த 175 பேர் பங்கேற்றனர். வயது வாரியாக மாணவர்கள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 6 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்ற கும்மிடிப்பூண்டி மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் 6ம் வகுப்பு மாணவர் ஆர்.லோகேஷ், கவரப்பேட்டை ஆர்எம்கே பாடசாலையின் 6ம் வகுப்பு மாணவர் சேஷாத்ரி, ஆத்துப்பாக்கத்தை சேர்ந்த மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் 10ம் வகுப்பு மாணவர் ஹேமந்த்குமார் ஆகிய மூவரும் அவரவர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நாடு திரும்பிய 3 மாணவர்களையும், பயிற்சியாளர் ராதாகிருஷ்ணனையும் கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள், சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Tags : competition ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு போட்டி