×

பட்டப்பகலில் பரபரப்பு இளநீர் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

சென்னை, மே 30: இளநீர் வெட்டிய போது சாலையில் நடந்து சென்ற அதிமுக பிரமுகர் மீது தண்ணீர் பட்டதால், ஆத்திரமடைந்த அவர் வியாபாரியை அரிவாளால் வெட்டினார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (42). இளநீர் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 11 மணியளவில் கணேசன், வாடிக்கையாளர் ஒருவருக்கு, இளநீர் வெட்டி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சரவணன், அவரது தம்பி உட்பட 3 பேர் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். கணேசன் வெட்டிய இளநீர் தண்ணீர் நடந்து சென்ற அதிமுக பிரமுகர் சரவணன் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இளநீர் வியாபாரி கணேசனிடம், அதிமுக பிரமுகர் சரவணன் தகராறு செய்தார். இதில், அவர்களுக்கு இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வியாபாரி கணேசன், சரவணனை பார்த்து இளநீர் வெட்டுவது போல் உன்னை வெட்டி விடுவேன் என்று இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து காட்டி எச்சரித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர் சரவணன், தன்னுடன் வந்தவர்களுடன் சேர்ந்து கணேசனை கடுமையாக தாக்கி, இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து கணேசனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதில் கணேசனுக்கு முதுகில் பலத்த வெட்டு விழுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், கணேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்படி வடபழனி போலீசார், வழக்குப்பதிவு செய்து, அதிமுக பிரமுகர் சரவணன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வடபழனியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : barber shop ,
× RELATED புதுக்கோட்டை புதுப்பட்டியில்...