×

வருவாய்த்துறை சார்பில் 31ல் சிறப்பு முகாம் இடங்கள் அறிவிப்பு

திருச்சி, மே 29:  திருச்சி மாவட்ட வருவாய்த்துறை மூலம் வாரம்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு தாலுகாவில் ஒரு கிராமம் தேர்வு செய்து அங்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. அதன்படி வரும் 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி கிழக்கு தாலுகாவில் தாராநல்லூர், திருச்சி மேற்கில் புத்தூர், திருவெறும்பூர் அரசங்குடி, ரங்கம் கிளிக்கூடு, மணப்பாறை சமுத்திரம், மருங்காபுரி ஆமணக்கம்பட்டி, லால்குடி புஞ்சை சங்கேந்தி, மண்ணச்சநல்லூர் கரியமாணிக்கம், முசிறி எம்.புதுப்பட்டி (மேற்கு), துறையூர் உப்பிலியபுரம் (வடக்கு), தொட்டியம் நாகையநல்லூர் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Announcement ,camping places ,
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...