×

1 கிலோ 300 கிராம், பணம் பறிமுதல் உப்பிலியபுரம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி உடல் மீட்பு

துறையூர், மே 29:  துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது ஓசரப்பள்ளி. இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் கண்ணம்மாள்(68). இவருக்கு ரேணுகா, சுகந்தி ஆகிய 2 மகள்களும், விஜயகுமார் என்ற மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதாலும் மகன் விஜயகுமார் நாமக்கல்லில் போலீசாக பணிபுரிந்து வருவதால் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி வரை கண்ணம்மா தனது மூத்த மகள் மற்றும் இளைய மகளுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். கடந்த 5 நாட்களாக கண்ணம்மாள் தனது மகளுடன் போனில் தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் விளக்கு மட்டும் எரிந்துள்ளது. வீட்டு கதவு திறக்கப்பட்டு இருந்தது. எங்கு தேடியும் அக்கம்பக்கத்தில் கண்ணம்மாள் காணவில்லை. இதையடுத்து அவருடைய மகள்கள் ரேணுகா, சுகந்திக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.


இதுகுறித்து ரேணுகா, சுகந்தி, தம்பி விஜயகுமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பேரில் விஜயகுமார் உப்பிலியபுரம் போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமின்றி தாய் உறவினர் வீட்டிற்கு   எங்கேயும் சென்றுள்ளாரா என்று தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பிச்சை என்பவர் தோட்ட கிணற்றில் கண்ணம்மாள்  உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளதை கண்ட அப்பகுதியினர் உடனடியாக விஜயகுமார் மற்றும் உப்பிலியபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உப்பிலியபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் இருந்த கண்ணம்மாவின் உடலை  மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த கண்ணம்மா திடீரென்று எப்படி இறந்தார், நகை பணத்திற்காக யாரும் கொலை செய்தார்களா? தவறி கிணற்றில் விழுந்து இறந்தாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : well ,Uppiliyapuram ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...