×

பண்ணை வீடுகளில் சூதாட்டம் தீவிரம்

கோவை, மே 29: கோவை மாவட்டத்தில் பண்ணை வீடுகளில் சூதாட்டம் நடப்பதாக புகார் அதிகரித்துள்ளது. கோவை புறநகர் பகுதியில் சூதாட்டம் பரவலாக நடக்கிறது. தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் கூட சூதாட்டத்தில் அதிக தொகை குவிக்க ஆசையுடன் களம் புகுந்திருப்பதாக தெரிகிறது. புதர் காடு, சுடு காடு, குளக்கரை என வெட்ட வெளி களங்களில் சூதாடும் சிலரை மட்டும் போலீசார் எளிதில் மடக்கி விடுகின்றனர். ஆனால் கிளப், பண்ணை வீடுகளில் சூதாட்டம் அதிகமாக நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் மட்டுமின்றி, தங்க மோதிரம், செயின் வைத்தும் சிலர்  வாகனங்களை பணயம் வைத்தும் சூதாட்டம் நடத்துவதாக தெரிகிறது. சூதாட்ட கும்பலை ஒருங்கிணைக்க புகார்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் போலீஸ் கெடுபிடி இல்லாத இடத்தில் பண்ணை, தோட்ட வீடுகளை தயார் செய்து போட்டி நடத்துகிறார்கள். செட்டிபாளையம், கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர், சூலூர் பகுதியில் சூதாட்டம் களை கட்டி வருகிறது.

கோவையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் சூதாட குவிந்து வருகிறார்கள். சனி, ஞாயிறு தினங்களில் புறநகரில் தோட்டம், விடுதிகளில் சூதாட்ட கும்பல் விடிய விடிய சீட்டாட்டம் நடத்துவதாக தெரிகிறது.
விளையாட்டு நூதனத்தால் பணம் குவிவதால் சிலர் இதற்கு அடிமையாக இருப்பதாக தெரிகிறது. பல இடங்களில் போலீஸ் ஆதரவில் சீட்டாட்டம் நடப்பதாக கூறப்படுகிறது.
இதை தடுக்க போலீசார் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Tags : farm houses ,
× RELATED ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு...