×

நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது அம்மன் கோயில்களில் கஞ்சி ஊற்ற அரிசி வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை

அரியலூர், மே 29: தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் கஞ்சி ஊற்ற அரிசி வழங்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியது.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்லாமிய மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கையும், 5 அடிப்படை கடமைகளில் ஒன்றான ரம்ஜான் விரதத்தை அவர்களின் மார்க்க வழிகாட்டுதலின்படி அரசியல் சார்பற்று கடைபிடிப்பது ஜனநாயகத்துக்கு சிறந்ததாகும்.

ஆனால் இப்தார் விருந்து எனும் பெயரில் அரசியல் கட்சிகள் தங்கள் அலுவலகங்களிலும், ஓட்டல்களிலும் நடத்தும் ரம்ஜான் கொண்டாட்டங்கள் சமூகத்தில் தீய விளைவை ஏற்படுத்துகின்றன. இஸ்லாமிய மக்களை தாஜா செய்து ஏமாற்றி அவர்களின் ஒட்டுமொத்த வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் எனும் ஓட்டு வங்கி அரசியலில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

ஆண்டுதோறும் அரசு சார்பில் அது திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் 4.500 மெட்ரிக் டன் தரமான அரிசி நோன்பு கஞ்சிக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அரசின் பொது நிதியிலிருந்து அதாவது இந்துக்களின் கோயில் நிதியிலிருந்து அதாவது 80 சதவீத இந்துக்கள் கட்டும் வரிப்பணத்திலிருந்து இஸ்லாமியர்களுக்கு ஹஜ் மானியம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகைக்கு முஸ்லிம்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கி, இந்து தமிழர்களை தமிழகத்தில் புறக்கணிப்பது வேலையாக போய்விட்டது.அரசியல் கட்சி அலுவலகங்கள், ஓட்டல்களில் இப்தார் விருந்து நடத்தி இந்து சமயத்தை அவமதித்து பேசுவோரை கைது செய்ய வேண்டும். நோன்புக்கு கஞ்சிக்கு அரிசி வழங்குவதுபோல் தமிழர்களின் பண்டிகைகள் அம்மன் கோயில்களில் ஆடிக்கூழ் ஊற்ற தானியங்கள், அரிசி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வழி பயிர் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் கூறுகையில்,
பயிர் பாதுகாப்பு முறைகளில் ரசாயன மருந்துகளை மட்டுமே அதிகமாக பயன்படுத்தியதால் ஏற்பட்ட பல்வேறு தீய விளைவுகளினால்  தற்பொழுது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பின் ஒரு அங்கமான உயிரியல் முறை பயிர் பாதுகாப்பில்  விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவற்றில் உயிர் எதிர்க் கொல்லிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பூசணம் மற்றும் பாக்டீரியா என்ற இரண்டு வகையான உயிர் எதிர்க் கொல்லிகள் பயன்பாட்டில் பாக்டீரியா வகையைச் சார்ந்த  சூடோமோனாஸ் ப்ளோர சன்ஸ் அதிக அளவில் விவசாயிகளால் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

நேரடி நோய் கட்டுப்பாட்டில் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்: சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் ஆனது 2,4 டை அசிட்டைல் பிளோரா குளு சினால், பினாசின், பையோலூற்றின் மற்றும் பைரால் நைட்ரின் போன்ற நோய் எதிர்ப்பு பொருள்களை உற்பத்தி செய்து பயிர் நோய்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது. இது மண்ணின் மூலம் பரவும் நோய்களான வேரழுகல், வாடல் நோய், நாற்றழுகல் நோய் மற்றும் வேர் வீக்க நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன் இலை வழியாக பரவும் பூசன நோய்களான குலை நோய், இலை யுறை கருகல் நோய், இலைப் புள்ளி நோய் மற்றும் ஆன்த்ராக்னோஸ் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கிறது.

மறைமுக நோய் கட்டுப்பாட்டில் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்: இம்முறையில் நோய்களை உண்டாக்கும் காரணிகளை நேரடியாக தாக்காமல் மற்ற நோய் எதிர்ப்பு நொதிகளான பெராக்ஸிடேஸ், பாலிபீனால் ஆக்ஸி டேஸ், பினைல் அலனின் அம்மோனியா லையேஸ், குளுக்கனேஸ் மற்றும் கைட்டினேஸ் போன்றவற்றை தாவரத்தில் அதிக அளவில் சுரக்க வழிவகை செய்து அதன்மூலம் நோய் காரணிகளின் வளர்ச்சி வீதத்தைக் குறைக்கிறது.

மேலும் இந்த வகை பாக்டீரியம் சிடரோ போர்  என்ற இரும்பு அயனியை உட்கிரகிக்கும் வல்லமை உடையது. இதன் மூலம் மற்ற நோய் உண்டாக்கும் பூசனங்களுக்குத் தேவையான இரும்பு சத்தை குறைத்து அதன் வளர்ச்சியை  தடுக்கிறது. இந்த பாக்டீரியம் நோய்களை கட்டுப்படுத்துவதுடன் நெல்லின் இலைச் சுருட்டு புழு, தண்டு துளைப்பான் ஆகியவற்றினால் ஏற்படும் தாக்குதலின் வீரியத்தையும் குறைக்கும் ஆற்றல் பெற்றவை. மேலும் வாழையில் வேர் குடையும் நூற்புழு, வேர் முடிச்சு நூற் புழு மற்றும் சுருள் நூற் புழு, காய் கறிகளில் வேர் முடிச்சு நூற் புழு போன்ற பல்வேறு நூற்  புழுவினால் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கிறது.

பயிர்களின் வளர்ச்சி  ஊக்கி: இந்த வகை பாக்டீரியம் நோய்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியை  ஊக்குவிக்கும் ஹார் மோன்களான ஆக்ஸின், ஜிப்ரலின்  மற்றும் இன்டோல் அசிடிக் அமிலம் ஆகியவற்றை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
மற்ற உயிர் எதிர் காரணிகளுடன் ஒப்புமை தன்மை: இந்த பாக்டீரியம் மற்ற உயிர்  எதிர்  காரணிகளான பேசில்லஸ் சப்டில்லிஸ் மற்றும் டிரைக்கோடடெர்மா விரி டி போன்றவைகளுடனும் நன்கு ஒப்புமை உடையதாக உள்ளதால் இதை மற்ற உயிர்  எதிர்  காரணிகளுடன் சேர்த்து பயன்படுத்தும் போது நோயை கட்டுப்படுத்தும் திறன் அதிகரிக்கிறது.

நெல் விதை நேர்த்தி செய்தல்: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் என்ற விகிதத்தில் தேவை யான அளவு தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விடவேண்டும். பின்பு விதைகளை ஈர சாக்கிலிட்டு நிழ லில் உலர்த்தி முளைக்கட்டி விதைக்க வேண்டும். மேலும் வடித்த தண்ணீரை நாற்றங்காலில் ஊற்றி விடுவதனால் நாற்றங்காலில் அதனால் கூடுதல் பயன் கிடக்கும்.
நாற்று நனைத்து பயன்படுத்துதல்: சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 1 கிலோவை 10 சதுர மீட்டர் நாற்றங் காலில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர்  ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு நட வேண் டும். அதிக நேரம் ஊற வைத்தால் அதன் செயல் திறனும் கூடுதலாக இருக்கும்.

வயலில் இடுதல் : ஒரு ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 20 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து இடவேண்டும். தெளிப்பு  முறை: சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சத கரைசலை அதாவது 1 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில்  நடவு நட்ட 45 நாட்கள் கழித்து நோய் களின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க  வேண்டும்.

சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்: இது ஒரு சிக்கனமான மற்றும் எளிய முறை ஆகும். விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசண நோய்களை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.பயிர்களின் நோய் எதிர்ப்பு  திறனை அதிகரிக்க  செய்கிறது.மண்ணிலுள்ள கனிம பொருட் களைப்  பயன்படுத்தி பல மடங்காக பெருகி பயிர்களுக்கு நீண்ட காலத்திற்கு பாதுகாப்பைத் தருகிறது.

இது பயிர்களின் வளர்ச்சி  ஊக்கியாக செயல்பட்டு பயிர்களின் மகசூலை அதிகரிக்க வழிவகை செய்கிறது. இவற்றை பயன்படுத்துவதால் நன்மை செய்யும் மற்ற உயிரினங்களுக்கும், மண்ணிலுள்ள மண்புழுக்களுக்கும் எவ்வித தீங்கும் விளைவிப்பதில்லை.இவற்றினால் சுற்றுப்புற சூழலுக்கு எவ்வித பாதிப்பும் உண்டாவதில்லை. மேலும் இவற்றை பயன்படுத்துவதால் பூச்சி மற்றும் நோய் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை என்பது சிறப்பான அம்சமாகும். இவ்வாறு வேளாண் பேராசிரியர்கள் கூறினர்.

Tags : temples ,Amman ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு