×

குண்டும்,குழியுமான சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதி

கரூர், மே29: கரூர் தாந்தோணிமலை பூங்கா நகர்ப்பகுதி சாலைகளை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பூங்கா நகர்ப்பகுதிகளை சுற்றிலும் உட்புற பகுதிகளுக்கு செல்வதற்கான தெருச்சாலைகள் அதிகளவு உள்ளன. இந்த சாலைகள் அனைத்தும் சிதிலமடைந்து  குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருந்தது. இதனை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால், சீரமைப்பதற்கு பதிலாக, பழுதடைந்த இடத்தில் மட்டும் ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையில் தெருச்சாலைகள் உள்ளன. இதனால், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் எளிதாக செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த தெருச் சா லைகளை தரம் உயர்த்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : tunnel roads ,
× RELATED குண்டும், குழியுமான சாலைகளை...