×

விளையாட்டு விடுதியில் சேர 6 மாணவர்கள் தேர்வு

ஈரோடு, மே 29: விளையாட்டு விடுதியில் சேர மாநில அளவில் 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கும் வகையில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில், வரும் கல்வியாண்டில் 7, 8, 9, 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 16 வகையான தகுதி தேர்வு கடந்த 9ம் தேதி ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் 104 மாணவிகள் பங்கேற்றனர். அதில், 77 மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான தகுதி தேர்விற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாநில அளவிலான தகுதி தேர்வு கடந்த 15, 16ம் தேதிகளில் சென்னையில் நடந்தது. இத்தேர்வில் ஈரோட்டை சேர்ந்த 7ம்வகுப்பு மாணவன் புவனேஸ், 11ம் வகுப்பு மாணவிகள் துர்காதேவி, அருணா, 8ம் வகுப்பு மாணவி சீதாலட்சுமி, 9ம் வகுப்பு மாணவி காவியஸ்ரீ, 9ம்வகுப்பு மாணவர் ஹேம்சன் ஆகிய 6 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.  இவர்களுக்கு சென்னையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு காலியாக உள்ள விளையாட்டு விடுதியில் சேர்க்கப்பட உள்ளதாக மாவட்ட விளையாட்டு பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags : game ,hotel ,
× RELATED ரம்மி விளையாட்டில் ரூ.30 ஆயிரம் இழப்பு போலீஸ்காரர் தற்கொலை