×

கால்பந்து போட்டியில் மொடக்குறிச்சி அணி வெற்றி

மொடக்குறிச்சி, மே 29:   மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி `யங்’ கால்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான முதலாமாண்டு ஐவர் கால்பந்து போட்டி நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
`யங்’ கால்பந்து கிளப்பின் விக்னேஷ், அரவிந்த் ஆகியோர் இப்போட்டியை நடத்தினர். இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. நிறைவு நாள் ஆட்டத்தில் மொடக்குறிச்சி எம்எஃப்சி அணி முதலிடமும், வடுகபட்டி ஆர்எம்எஃப்சி- ஏ அணி இரண்டாம் இடத்தையும், வடுகபட்டி ஆர்எம்எஃசி- பி அணி மூன்றாம் இடத்தையும், ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றது.முதலிடம் பெற்ற அணிக்கு நஞ்சை ஊத்துக்குளி எஸ்கேபி, வானவில் அகாடமி சார்பில் ரூ.7,000 ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
2ம் இடம் பெற்ற அணிக்கு மொடக்குறிச்சி முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.5001ம், கோப்பையும் வழங்கப்பட்டது. 3ம் பெற்ற அணிக்கு நஞ்சை ஊத்துக்குளி காயத்ரி விக்னேஷ் டிராவல்ஸ் சார்பில் ரூ.3 ஆயிரம், கோப்பை வழங்கப்பட்டது. 4ம் இடம் பிடித்த அணிக்கு நஞ்சை ஊத்துக்குளி ஏஎஸ்கே பழமுதிர் நிலையம் சார்பில் ரூ.2001ம், கோப்பையும் வழங்கப்பட்டது.


Tags : Modakurichi ,football match ,
× RELATED மொடக்குறிச்சி தாலுகாவில் வாக்கு இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு