×

கொல்லிமலை கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

சேந்தமங்கலம், மே 29:  கொல்லிமலை கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நாமக்கல்  மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாடு ஊராட்சி செம்மேட்டில் அய்யன்  திருவள்ளுவன் கிளை நூலகம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பாழடைந்த  கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட அரிய புத்தங்களை உள்ளன. ஆனால் இவற்றை பாதுகாப்பாக வைக்க  நூலகத்தில் போதிய இடமில்லை. எனவே புத்தகங்கள் அனைத்தையும் தரையில் அடுக்கி  வைத்துள்ளனர். அதேபோல் வாசகர்கள் உட்கார்ந்து படிக்க போதுமான இருக்கை  வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல், கிளை நூலகம் பாழடைந்து  வருகிறது. இங்குள்ள் புத்தகங்களும் சேதமடைந்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும்  இந்த நூலகத்துக்கு புதிய புத்தகங்களை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாணவர்கள், இளைஞர்கள் நலன் கருதி, கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி,  அடிப்படை வசதிகள், போதிய இருக்கைகளை  வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : building ,branch ,Kollamalai ,
× RELATED தூத்துக்குடி அருகே அரசின் 1 ஏக்கர்...