×

கோயில்களில் தொடர் கொள்ளை

காரிமங்கலம், மே 29: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோயில்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 3 மாதங்களில் 8க்கும் மேற்பட்ட கோயில்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.  இந்நிலையில் காரிமங்கலத்தை அடுத்த அடிலம் பகுதியில் ஏ.சப்பாணிபட்டி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில், நேற்று முன்தினம் நடைகதவு திறந்து கிடந்தது.  உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் கோயில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள், காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதே கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு திரௌபதி அம்மன் கோயிலில் கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.  


Tags : robbery ,temples ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு