×

மசூதி கணக்கு கேட்டு நிர்வாகி மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி, மே 29:    கிருஷ்ணகிரி, சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் மகன் இசாந்த்(25). இவர் அப்பகுதியில் உள்ள அசூல் மசூதி நிர்வாகியாகவும், டிரஸ்ட் நிர்வாகியாகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாதிக், ஆசிப், ஜாபர், யெசூல் ஆகியோர் இசாந்திடம் சென்று மசூதி மற்றும் டிரஸ்ட்டின் வரவு செலவு கணக்கினை கேட்டுள்ளனர். இதில் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சாதிக் உள்ளிட்டவர்கள் இசாந்தினை பலமாக தாக்கியுள்ளனர். மேலும் அங்கு கிடந்த ஸ்குரு டிரைவரை எடுத்து இசாந்த் கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இசாந்த் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து  சாதிக் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : administrator ,
× RELATED சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில்...