×

மனைவியுடன் போனில் பேசியபோது தகராறு

கிருஷ்ணகிரி, மே 29:  பீகார் மாநிலம் பகர்துகூர் பகுதியைச்  சேர்ந்தவர் கணேஷ் ஷர்மா மகன் சுனில் ஷர்மா(27). இவர் கடந்த 20 நாட்களுக்கு  முன்னர் பேரிகை அருகே, கொலதாசபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார்  கோழிப்பண்ணையில் ஊழியராக வேலைக்கு சேர்ந்து, அங்கு தங்கி வேலை பார்த்து  வந்துள்ளார். இந்நிலையில் 26ம் தேதி மிரவு 11 மணிக்கு மேல் பீகார்  மாநிலத்தில் உள்ள தனது மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது  அவர்களுக்குள் போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனமுடைந்து காணப்பட்ட  சுனில் ஷர்மா தான் தங்கியிருந்த பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து  கொண்டார். இது குறித்து கோழிப்பண்ணையின் மேலாளர் விஜயகுமார் கொடுத்த  புகாரின் பேரில், சுனில் ஷர்மாவில் சடலத்தை கைப்பற்றிய பேரிகை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல கர்நாடகாa மாநிலம் பங்காரப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஹரிகுமார்(30) என்பவர் மனைவி ரேவதி தற்கொலை செய்தார். ஹரிகுமார் கெலமங்கலம் அருகே நேதாஜி நகரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி (27) என்பவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ரேவதியின் தாய், தந்தை ரேவதி, சிறுவயதாக இருக்கும் போதே இறந்து விட்டனர். அதனால் தனக்கு என யாரும் இல்லையே என வாடிய ரேவதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்