×

திருத்தங்கல்லில் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம்

சிவகாசி. மே 29: சிவகாசி அருகே, திருத்தங்கல் நகராட்சியில் குடிநீர் விநியோகம் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகாசி அருகே, திருத்தங்கல் காளியம்மன் கோயில் அருகே கண்ணகி காலனி உள்ளது. இந்த பகுதிக்கு நீண்ட நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை திருத்தங்கல் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் விநியோகம் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர துணை செயலாளர் விஜயராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் சமுத்திரம், சிவகாசி வட்டார செயலாளர் ஜீவா மற்றும் நிர்வாகிகள், கண்ணகி காலனி வார்டு மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், குடிநீர் விநியோகம் தொடர்பான கோரிக்கை மனுவை நகராட்சி ஆணையாளரிடம் கொடுத்தனர்.

Tags : Edinburgh ,
× RELATED உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக...