×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வருவாய் வட்டங்களிலும் இன்று ஜமாபந்தி: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், மே 29: காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து வருவாய் வட்டங்களிலும் இன்று ஜமாபந்தி நடைபெறும் என கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம்  மாவட்டத்தில் வருவாய் துறை சார்பாக 1428ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் இன்று (முதல் ஜூன் மாதம் 18ம் தேதி வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெறும்.

செங்கல்பட்டு வட்டத்தில் கலெக்டர் தலைமையிலும். காஞ்சிபுரம் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறும்.
பெரும்புதூர் வட்டத்தில் சப் கலெக்டர் தலைமையிலும், திருப்போரூர் வட்டத்தில் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), திருக்கழுக்குன்றம் வட்டத்தில் செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர், செய்யூர் வட்டத்தில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம் வட்டத்தில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர்.

மதுராந்தகம் வட்டத்தில் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர்,  பல்லாவரம் வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (தகவல் தொழில்நுட்ப துரித சாலை திட்டம்) வாலாஜாபாத் வட்டத்தில்  தனித்துணை ஆட்சியர் ( ச.பா.தி) காஞ்சிபுரம், உத்திரமேரூர் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் 1428ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறும்.

மேலும். அந்தந்த வட்டங்களில் மேற்கண்ட அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் நாட்களின் விவரங்கள் வட்டாட்சியர் அலுவலத்தில் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே, நடைபெறவுள்ள வருவாய் தீர்வாய நிகழ்வினை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

Tags : Kanchipuram district ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...