×

சிவகங்கையில் மே 31ல் வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை, மே 29: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே.31ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் தெரிவித்ததாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் “வேலைவாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மே.31 காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவனம் பங்கேற்று பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்த பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

பயிற்சியின் போது உதவித்தொகை மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டது. இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Work camp ,Sivaganga ,
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...