×

மகன் இறந்த விரக்தி சார்பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை, மே 29: மகன் இறந்த விரக்தியில் சார்பதிவாளர் தூக்கிட்டு இறந்தார். தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் கோபு (58). இவர் கள்ளக்குறிச்சியில் சார்பதிவாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவரது மகன் கிருபாகரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த கோபு நேற்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,deceased ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை