×

குட்கா 146 கிலோ பறிமுதல்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 146 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகர் 5வது தெருவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பதுக்கி, கடைகளுக்கு விற்பனை செய்வதாக சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அங்கிருந்து, ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 146 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, சார்லஸ் நகர் 5வது தெருவைச் சேர்ந்த டேனியல் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இவர், வெளி மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து, சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. பின்னர், அவரை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். குட்கா விற்பனை யில், வேறு யாருக் கேனும் தொடர்பு் உள்ளதா எனவும் விசாரித்து வருகின்னர்.

Tags : Gudka ,
× RELATED புதுச்சேரி மத்திய சிறைக்குள் வீசய 5...