×

கடையம் அருகே நிச்சயம் செய்த மணப்பெண்ணை காரில் கடத்திய உறவினர் உள்பட இருவர் கைது

கடையம், மே 29: கடையம் அருகே நிச்சயம் செய்த மணப்பெண்ணை காரில் கடத்திச்சென்ற தாய்மாமா உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கடையம் அடுத்த பண்டாரகுளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவரது மகள் குமுதாவிற்கு (20) வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு நிச்சயமும் செய்துள்ளனர். இதை விரும்பாத குமுதாவின் தாய்மாமாவான  முறப்பநாடு, தென்னல்பட்டி, வடக்குத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (57),  அவரது மகன் வேல்முருகன் (21) உள்ளிட்ட 6 பேர் குமுதாவை காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார், குமுதாவை மீட்டதோடு, கருப்பசாமி, குலவணிகர்புரத்தை சேர்ந்த முண்டசாமி ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். மேலும் தலைமறைவான கார் டிரைவர் உள்ளிட்ட 4 பேரைத் தேடி வருகின்றனர்.

Tags : persons ,bride ,beach ,
× RELATED 3,288 நபர்கள் தபால் வாக்கு செலுத்தினர்