×

ஆற்காடு அருகே பரபரப்பு பீர்பாட்டிலால் கழுத்தறுத்து விவசாயி கொடூரக்கொலை முன் விரோதம் காரணமா? போலீஸ் விசாரணை

ஆற்காடு, மே 29: ஆற்காடு அருகே பீர்பாட்டிலால் கழுத்தறுத்து விவசாயி கொலை செய்யப்பட்டார். முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை இருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(36), விவசாயி. இவரது மனைவி சாந்தி(36). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ரங்கநாதனுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதையடுத்து, வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சாந்தி மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் ரங்கநாதன் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை கலவை அடுத்த மேல்நெல்லி கிராமம் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில், பீர்பாட்டிலால் கழுத்தறுக்கப்பட்டு ரங்கநாதன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்ற கிராம மக்கள், இதுகுறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து கலவை போலீசார் வழக்குப்பதிந்து, ரங்கநாதனை கொலை செய்தது யார்? முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : assassination ,Arcot ,peanut harlot ,Police investigation ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம்