×

கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் கலெக்டரிம் மனு

திருப்பூர், மே 28: திருப்பூர் குண்டடம் பகுதியில் அமையவுள்ள கோழிபண்ணையை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிம் மனு.
மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, குண்டடம் அடுத்த ருத்திராபதி குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பகுதியை சுற்றி முத்தனம்பட்டி, எம்.அம்மாபாளையம், சங்கபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சுற்றி அமைந்துள்ளது. இந்நிலையில், முட்டை, கோழிப்பண்னை தொழிற்சாலை பணிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் வேகமாக நடைபெற்ற வருகிறது. இந்த பண்ணை இந்த இடத்தில் அமைந்தால் காற்று மாசு ஏற்படும், நிலத்தடி நீர் மற்றும் ஈக்களின் தொல்லையும் அதிகரிக்கும். எனவே, கலெக்டர் தலையீடு செய்து உடனடியாக கோழிபண்ணையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Public Opportunity Collector ,
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...